Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரம்பலூரில் 2.10 கோடி ரூபாய் பறிமுதல்: விசிக பிரமுகர்கள் கைது

ஏப்ரல் 03, 2019 05:35

பெர்மபலுர்: பெர்மபலுர் அரியலூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய்  நோட்டு கட்டுகளாக கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக விசிகவை சேர்ந்த பிரமுகர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பெரம்பலூர் அரியலூர் சாலையில் பேரளி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அவ்வழியே வந்த டாடா சபாரி வாகனத்தை சோதனையிட்டபோது காரின் கதவின் உட்புற தகட்டிற்கு உள்ளே 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டு கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்த போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காரை எடுத்து சென்று காரின் கதவுகளில் மறைத்து கொண்டுவரப்பட்ட 2 கோடியே 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். 

அந்த காரில் இருந்த விசிகவின் பிரமுகர்களான முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கதுரை மற்றும் மாநில பொறுப்பாளர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்